Total Pageviews

Search This Blog

"இனியும் இது தொடர்ந்தால்..".. திருவிழாவை நிறுத்த உத்தரவு வரும் - உயர் நீதிமன்றம் காட்டம்

கோவில் திருவிழாக்கள் யார் பெரியவர் என பலம் நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன

உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் செல்லும் நிலையில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது - உயர் நீதிமன்றம்

வன்முறைகள் வெடித்தால் கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. பதிலாக கோவில்களை மூடிவிடலாம் எனவும் உயர் நீதிமன்றம் காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கோவில் அறங்காவலர் வழக்கு

பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டும்; சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் திருவிழாவை நிறுத்த காவல் துறைக்கு உத்தரவு

No comments:

Post a Comment

Followers