டிசம்பர் 19, 2022 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 25042-ல், நாட்டின் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் மொத்தம் 5850 நீதித்துறை அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்கள் குறித்து எம்.பி கனிமொழி கேட்ட கேள்விக்கு சட்ட அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜனவரி 1, 2020 முதல், உச்ச நீதிமன்றத்திற்கு 12 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றங்களுக்கு 351 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திரு ரிஜிஜு பதிலளித்தார்.
உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 1108 நீதிபதிகளுக்கு எதிராக தற்போது 333 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தற்போது உயர்நீதிமன்றங்களில் 775 நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாகவும் அவர் மேலும் விளக்கினார்.