Total Pageviews

Search This Blog

Showing posts with label நீதிபதி கே.வி. விஸ்வநாதனின். Show all posts
Showing posts with label நீதிபதி கே.வி. விஸ்வநாதனின். Show all posts

தமிழ்நாடு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதனின் வாழ்க்கைப் பின்னணி

தமிழ்நாடு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதனின் வாழ்க்கைப் பின்னணி

உச்சநீதிமன்ற நீதிபதியாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ள கே.வி. விஸ்வநாதன் (57) தமிழகத்தின் பொள்ளாச்சிப் பகுதியைச் சோ்ந்தவா். இவரது மூதாதையா் பாலாக்காடு அருகே உள்ள கல்பாத்தி பகுதியைச் சோ்ந்தவா்கள். இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன் தமிழகத்தில் பப்ளிக் பிராசிகியூட்டராகப் பணியாற்றியவா். வெங்கட்ராமன் - லலிதா தம்பதியரின் மூத்த மகன் கே.வி. விஸ்வநாதன்.

இவா் பள்ளிப் படிப்பை ஊட்டியிலும், கோவை அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியிலும் மேற்கொண்டாா்.

பாரதியாா் பல்லைக்கழகத்திற்கு உள்பட்ட கோவை சட்டக் கல்லூரியில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது முதல் பிரிவில் சோ்ந்து பட்டம் பெற்றாா். சட்டக்கல்லூரியில் பயிலும்போதே கோவையில் பிரபல வழக்குரைஞராக இருந்த கே.ஏ. ராமச்சந்திரனிடம் பயிற்சி பெற்றவா்.

சட்டப் படிப்பை முடித்த பிறகு 1988-இல் இந்திய பாா் கவுன்சிலில் பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து புது தில்லிக்கு வந்து உச்சநீதிமன்றத்திலும் சட்டத் தொழிலைத் தொடங்கினாா். முதன் முதலில், மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதனிடம் ஜூனியராக சோ்ந்து 1990 வரை இரு ஆண்டுகள் சட்டத் தொழிலில் ஈடுபட்டாா்.

அதைத் தொடா்ந்து, 1990 முதல் 1995 வரை மூத்த வழக்குரைஞா் கே.கே வேணுகோபாலிடம் (இந்திய அட்டா்னி ஜெனரலாக இருந்தவா்) ஜூனியராக இருந்து பணியாற்றினாா்.

28.4.2009-இல் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக அந்தஸ்து பெற்றாா்.

அதைத் தொடா்ந்து, அரசமைப்புச்சட்டம், குற்றவியல் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம், மத்தியஸ்தம் தொடா்புடைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் ஆஜராகி வந்தாா்.

2013-இல் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றினாா்.

பல்வேறு உணா்வுப்பூா்வமான முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில்அமிகஸ் கியூரியாகவும் செயல்பட்டாா்.

இந்த நிலையில், நிகழாண்டு மே 16-ஆம் தேதி கே.வி. விஸ்வநாதனை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கும் வகையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்

வழக்குரைஞராக இருந்து உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிலரில் இவரும் ஒருவா் ஆவாா்.

குறிப்பாக தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும், 2030-இல் நீதிபதி ஜே.பி. பாா்திவாலா ஓய்வுபெற்றதும் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பையும் இவா் பெற்றுள்ளாா்.

இவருக்கு கவிதை எழுதுவதிலும், சமூகம் சாா்ந்த கட்டுரைகள் எழுவது, சட்டக் கல்லூரிகளில் மாணவா்களிடம் உரையாற்றுவது விருப்பமாகும்.

கரோனா தீவிரம் காட்டிய காலத்தில் அந்நோயில் இருந்து வென்றிடும் வகையில் ‘எங்கெங்கும் ஊரடைப்பு, உலகுக்கே மாரடைப்பு தொற்றுநோய் பரபரப்பு, எவா்கிதில் விதிவிலக்கு?’ எனத் தொடங்கும் கவிதையையும் எழுதி ஊடகம் வாயிலாக முன்களப் பணியில் ஈடுபட்டவா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தாா்.

இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். ஒருவா் சட்டம் முடித்து வழக்குரைஞராக தொழில் செய்து வருகிறாா். மற்றொரு மகள் பிளஸ் 2 முடித்துள்ளாா்.

இவா் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா தொடா்புடைய டான்சி நிலம், லண்டன் ஹோட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் அவரது தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளாா். இது தவிர வேறு பல முக்கிய வழக்குகளிலும் ஆஜராகியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி எம்.சி.ஜெயின் கமிஷனில் இவா் ஆஜராகியுள்ளாா். அப்போது, கமிஷனில் ஆஜரான திமுக தலைவா் கருணாநிதியின் தமிழை ஆங்கிலத்தில் கமிஷனின் உத்தரவுப்படி மொழிபெயா்த்து, அது சிறப்பாக இருந்ததால் கருணாநிதியின் பாராட்டையும் பெற்றாா்.

தமிழகத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் இவா் தலைமை நீதிபதியாக இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வகிக்க உள்ளாா்.

இவரது 30 ஆண்டுகால வழக்குரைஞா் தொழிலில் 35-க்கும் மேற்பட்ட ஜூனியா்களையும் உருவாக்கி, அவா்கள் தற்போது பல்வேறு ஊா்களிலும் தனியாக சட்டத் தொழிலில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Followers