Total Pageviews

Search This Blog

Showing posts with label Chennai High court. Show all posts
Showing posts with label Chennai High court. Show all posts

லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டி.என்.பி.எஸ்.சி -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு, TNPSC within Anti-Bribery Department - Chennai High Court Verdict

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.


இந்தத் திருத்தத்தை எதிர்த்தும், அதை 2011 ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊழல் தடுப்புச் சட்ட பிரிவின்படி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை தன்னிச்சையானது என கூற முடியாது என தெரிவித்து விதிகளை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த திருத்த விதிகள் காரணமாக  தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை எனவும், இந்தத் திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


 சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பு கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த  முக்கியத்துவமும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆசிரியர் பணியின் நோக்கம் வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல, Chennai High court

ஆசிரியர் பணியின் நோக்கம் வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: "மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பதுதான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல" என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுவதை கண்டறிந்த அரசு, உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.


இந்த வழக்குகள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "இடமாற்றம் தொடர்பாக அரசு பல்வேறு காலகட்டங்களில் பிறப்பித்த அரசாணைகளுக்கு முரணாக இடமாற்றம் செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்து திருத்துறைப்பூண்டி பள்ளியிலேயே பணியில் தொடர அனுமதிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வியையும், திறமையையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல" எனக் கூறிய நீதிபதி, தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் மனுதாரர்கள் தங்களது ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம். மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Followers