தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த திருத்த விதிகள் காரணமாக தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை எனவும், இந்தத் திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளனர்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பு கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.