Total Pageviews

Search This Blog

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: மதுரை ஐகோர்ட்

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணைக் காட்டக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.


நெல்லையைச் சேர்ந்த ஞானபிரகாசம், கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

 
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.


நீதிமன்ற உத்தரவு தானே என்ற அலட்சிய போக்குடன் அதிகாரிகள் உள்ளனர். இதனை ஏற்கமுடியாது. இது போன்ற அவமதிப்பு வழக்குகளின் அடிப்படையில் ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும். அது தான் நீதியாகவும் இருக்கும்.


நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அதிகாரிகள் மீது கருணை காட்டக் கூடாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.

No comments:

Post a Comment

Followers