Total Pageviews

Search This Blog

Showing posts with label பேச்சுரிமை. Show all posts
Showing posts with label பேச்சுரிமை. Show all posts

பேச்சுரிமை என்பது பிறரை இழிவுபடுத்தி வசைபாடுவதற்கு அல்ல | Freedom of speech is not for lashing out at others

அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமை என்பது பிறரை இழிவுபடுத்தி வசைபாடுவதற்கு அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் ஜாவுன்பூர் பகுதியை சேர்ந்தவர் மும்தாஸ் மன்சூரி. இவர் 2020ஆம் ஆண்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்ற அமைச்சர்களை பேஸ்புக்கில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். 


மும்தாஜ் பதிவு பிரதமர் உள்ளிட்டோர் மிக மோசமாக அவமதிப்பதாக உள்ளது எனக் கூறி இபிகோ 504, ஐடி சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

சம்பந்தப்பட்ட நபர் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை இழிவாக குறிப்பிட்டு திட்டியதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மும்தாஜ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 


நீதிபதி அஸ்வினி குமார், நீதிபதி ராஜேந்திர குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.




Followers