Total Pageviews

Search This Blog

உச்சநீதிமன்றம் | பசுக்களை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு

 பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு


பசுக்களை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை திங்களன்று உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.


நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று கூறியது. அவர்களின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்றும் மனுதாரரிடம் (கோவன்ஷ் சேவா சதன்) பெஞ்ச் கேட்டது.


இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பசு பாதுகாப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினை என்றும், அதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.


ஆனால், பெஞ்ச் மனுவை ஏற்க மறுத்ததால், வழக்கு வாபஸ் பெறப்பட்டது

No comments:

Post a Comment

Followers