Total Pageviews

Search This Blog

*நிலப்பட்டா உரிமை, போலி பத்திரத்தை ஆன்லைனில் கண்டுபிடிக்கலாமா? தமிழக அரசு*

 

*நிலப்பட்டா உரிமை, போலி பத்திரத்தை ஆன்லைனில் கண்டுபிடிக்கலாமா? தமிழக அரசு*


த்திரப்பதிவுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

போலி பத்திரங்களை தயார் செய்து நடக்கும் மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.. எனவேதான், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் இயற்றப்பட்டிருக்கிறது.
 

 

இதைத்தவிர, பதிவு செய்ய வரும் ஆவணங்களில், பதியப்படும் சொத்துக்கள் குறித்த போட்டோக்களும், ஆவணமாகவே இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

காலி இடங்கள்: ஏனென்றால், காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு ஆங்காங்கே நடக்கிறதாம்.. எனவேதான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க சொல்கிறார்கள்..

காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த போட்டோவும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.. இவ்வளவு இருந்தாலும், மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன..

அப்படியானால், போலி பத்திரங்களை எப்படித்தான் கண்டுபிடிப்பது? இதற்கு சில வழிமுறைகள் உள்ளன.. குறிப்பாக, பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம்... இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே, போலி பத்திரத்தை கண்டுபிடித்து விடலாம்.


முத்திரைத்தாள்: அல்லது முத்திரைத்தாள் வாங்கிய தேதி, முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் போன்றவற்றை வைத்தும் போலி பத்திரங்களை கண்டுபிடிக்கலாம்.. அதேபோல, சொத்தின் மூலப்பத்திரங்கள் வைத்தும் ஓரளவு போலி பத்திரங்களை கண்டுபிடிக்கலாம்.

ஆன்லைனிலும் இதற்கு வழி உண்டு.. http://ecview.tnreginet.net/ என்ற வெப்சைட்டிற்குள் சென்றால், உங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், உங்கள் நிலத்தின் உண்மைத்தன்மையையும் நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வெப்சைட்: அதாவது, இந்த வெப்சைட்டிற்குள் நுழைந்து, சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் போன்ற இந்த 3 தகவல்களையும் பிழையின்றி பதிவு செய்தால், பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரும்.. அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது? உங்கள் நிலம் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் நேரடியாகவே நீங்கள் அறிந்து கொள்ளலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta

வீடியோ ஆதாரம்: 2 மாதங்களுக்கு முன்புகூட, சொத்து விற்பனையில் முறைகேடு ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசு ஒரு முறையை கொண்டுவந்திருக்கிறது.. அதாவது, நீங்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து, பத்திரங்களை பதிவு செய்துவிட்டு கிளம்பும்வரை, எல்லாமே அங்கிருக்கும் சிசிடிவியில் வீடியோவாக பதிவாகிவிடுமாம்.. இந்த வீடியோ பதிவினை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்...

இந்த வீடியோவை, MX PLAYER,VLC PLAYER என்ற ஆப்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Mini player செயலியை டவுன்லோடு செய்து ஒலி, ஒளியுடன் காணலாம்.

நடவடிக்கை: இதன்மூலம், யாருடைய சொத்தையும் யாரும் உரிமை கொண்டாட முடியாது.. சொத்தை விற்பனை செய்துவிட்டு, அதை நான் விற்கவில்லை, போலி கையெழுத்து போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை இனி தடுக்க முடியும்... வீடியோவை எடுத்து போட்டு காட்டி நீங்கள்தானே விற்றீர்கள் என்று பதிவுத்துறையினர் கேட்கவும் முடியும்.

*செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?*

 *செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?*


இந்தியாவில் செட்டில்மெண்ட் பத்திரம் பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கும்.

கிரைய பத்திரத்திற்கும் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கும் சொத்தை வாங்கியவருக்கான அதிகாரம் என்ன?
செட்டில்மெண்ட் பத்திரத்தை சில நேரங்களில் ரத்து செய்ய முடியுமா?
செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யும் வழிகள் என்ன?




தீர்வுப் பத்திரம் என்பது சட்டப்பூர்வ ஆவணமாகும், இது பொதுவாக சொத்து அல்லது நிதி விஷயங்களுடன் தொடர்புடைய கட்சிகளுக்கு இடையேயான தகராறுகள் அல்லது மோதல்களைத் தீர்ப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழக்குகளைத் தவிர்ப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.

இந்தியாவில், செட்டில்மெண்ட் பத்திரங்கள் தொடர்பான விதிகள் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் 2(h) பிரிவு ஒரு ஒப்பந்தத்தை "சட்டத்தால் செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தம்" என்று வரையறுக்கிறது. ஒரு தீர்வுப் பத்திரம் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் ஆகும், இது முறையாக நிறைவேற்றப்பட்டால், சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படும்.

Can-the-settlement-deed-be-cancelled
செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?

உங்களுடைய சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய அதற்குண்டான தொகையை பெற்றுக் கொண்டு விற்பனை செய்வோம். அந்த சொத்தை விற்பனை செய்த நாளிலிருந்து யார் வாங்கியவரோ அவரே அந்த சொத்தை முழு சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய உரிமையாளர் ஆவர்.

இனி அந்த சொத்தில் நீங்களோ அல்லது உங்கள் வாரிசுகளோ எவ்வித உரிமையும் செலுத்த முடியாது முழு அனுபவ உரிமையும் பணம் கொடுத்து சொத்தை வாங்கியவருக்கு கொடுத்து விட்டீர்கள் இதை கிரையம் கொடுப்பது விலை பத்திரம் மூலமாக விற்பனை செய்தது என சொல்லுவோம்.

செட்டில்மெண்ட் எழுதும்போதே, இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தால், எழுதி கொடுத்தவர் அதனை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சொத்தினை அவர் எழுதிக் கொடுத்தவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் உரிமையுடன் எழுதிக் கொடுத்து, அதனை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதால், அதனை பெற்றவர் அச்சொத்தினை வேறு யாருக்காவது கிரையமோ அல்லது வேறு வகையிலோ உரிமை மாற்றம் செய்திருக்கக்கூடும்.



ஆனால் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு கிரயத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அது என்னவென்றால் செட்டில்மெண்ட்டில் பத்திரப் படி சொத்தை இனொருவருக்கு எழுதிக் கொடுக்க பிரதிபலனாக பணமோ, பொருளோ எதுவும் பெறக்கூடாது. மேலும் இரத்த சம்மந்தமான உறவுகளுக்கு மட்டும் தான் செட்டில்மெண்ட்டில் பத்திரப் படி சொத்தை எழுதி வைக்க முடியும். பணத்தை பெற்றுக்கொண்டு சொத்தை எழுதி வாங்குவது கிரய பத்திரப்படி சொத்தை வாங்குவதாக ஆகிவிடும்.

கிரைய பத்திரத்திற்கும் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கும் சொத்தை வாங்கியவருக்கான அதிகாரம் என்ன?

கிரைய பத்திரப்படி ஒருவர் சொத்தை வாங்கும் போது அவருக்கு அந்த சொத்து முழு அனுபவ உரிமையும் கொடுக்கிறது ஏனென்றால் பிரதிபலனாக பணத்தைப் பெற்றுக் கொண்டு சொத்தை கொடுப்பதால் அந்த சொத்தின் முழு அதிகாரத்தையும் விலை கொடுத்து வாங்கியவர் பெற்று விடுகிறார் ஆனால் செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக ஒரு சொத்தைப் பெறும்போது அதில் நிபந்தனைகள் சொல்லப்பட்டு இருக்குமேயானால் அது முழுமையான அனுபவ உரிமையை எழுதி வாங்கியவருக்கு கொடுக்காது. ஏனென்றால் பிரதிபலனாக பணமோ பொருளோ பெறாத பட்சத்தில் தானமாக அவர் கொடுக்கும் சொத்திற்கு நிபந்தனை விதிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது நிபந்தனையின் காரணமாக சொத்தை எழுதி வாங்கியவருக்கு முழு அதிகார உரிமையும் கிடைக்காது.

செட்டில்மெண்ட் பத்திரத்தை சில நேரங்களில் ரத்து செய்ய முடியும்?

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது அந்த பத்திரத்தில் எழுதி கொடுப்பவர் ஏதாவது நிபந்தனைகள் வைத்திருந்தால் அதன்படி ரத்து செய்யலாம். உதாரணமாக செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் உண்டு என்று சொத்தை எழுதி கொடுத்தவர் எழுதியிருந்தால் சொத்தை எழுதி வாங்கியவர் Absolute Right என்று சட்டப்படி முழுமையாக அனுபவிக்கும் முழு உரிமையும் வாங்கியவருக்கு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
எனவே அந்த சொத்தை வாங்கியவர் விற்கவோ அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது.

செட்டில்மெண்ட் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை எழுதி வாங்கியவர் கடைபிடிக்காவிட்டாலோ அல்லது எழுதிக் கொடுத்தவர் மனம் மாறி அதனை ரத்து செய்ய நினைத்தாலோ ரத்து செய்யலாம். செட்டில்மெண்ட் மூலம் ஒருவர் தன்னுடைய சொத்தின் முழு உரிமையையும் வேரொருவருக்கு எழுதிக் கொடுத்த பிறகு அதனை அவர் மூன்றாம் நபருக்கு விற்றிருந்தால், அதன்பிறகு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்தால் கிரையம் பெற்றுவரும் பாதிக்கப்படுவார்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யும் வழிகள் என்ன?

செட்டில்மெண்ட் மூலம் சொத்தை பெற்றவர், அதனை வேறு யாருக்கும் கிரையம் அல்லது செட்டில்மெண்ட் மூலம் மாற்றாமல் இருந்து அவரும் அதனை ரத்து செய்ய ஒப்புக் கொண்டால், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் நினைத்தால் எளிதில் ரத்து செய்யலாம்.

செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவர் நிபந்தனைகளை மீறும் போது பத்திரத்தை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தான் ரத்து செய்ய வேண்டும்.

செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவர் அந்த சொத்தை வேறொருவருக்கு விற்பனை செய்து விட்டால் உடனடியாக சொத்து பத்திரத்தை ரத்து செய்ய இயலாது காரணம் சட்டப்படி நீதிமன்றத்தில் தான் வழக்கு போடவேண்டும். செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவரும் பின் அந்த சொத்தை விலைக்கு வாங்கியவரும் வழக்கில் சேர்க்கப்படுவர் விசாரணைக்கு பிறகு நீதிமன்றமே பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடும்.

ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று எழுதி பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் கூட, எழுதிக் கொடுத்தவரை ஏமாற்றியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ எழுதி வாங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் மூலம் அதனை ரத்து செய்யலாம்.

இந்தியாவில் பரம்பரை சொத்தில் கிடைத்த பங்குகளை செட்டில்மெண்ட் எழுதி வைக்க முடியும். சட்டப்படி எழுதி கொடுக்கப்பட்ட சொத்தை எழுதி கொடுப்பவர் அவரது பெயருக்கு physical possession பெற்றிருக்க வேண்டும். வரியில் மாற்றம் செய்திருக்க வேண்டும் மேலும் சொத்து உரிமை ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்யப்படாத சொத்து சட்டரீதியாக எழுதி கொடுப்பவர் பெயருக்கு உரிமை மாற்றம் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தமாகும் இதை ஆங்கிலத்தில் அந்த ஆவணம் act ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்படி act செய்யப்படாத சொத்துக்களை வாங்குவது செல்லுபடியாகாமல் ரத்து செய்யப்படலாம்.

*நோட்டரி பப்ளிக் என்றால் என்ன?*

 *நோட்டரி பப்ளிக் என்றால் என்ன?*


நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் பற்றிய முழுமையான விளக்கம்?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் யார்?
 
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் சான்றொப்பம் எதற்கு தேவை?

நோட்டரி பப்ளிகின் உண்மை சான்று என்றால் என்ன?

சாட்சி உறுதி நோட்டரி சான்று என்றால் என்ன?
 

 

நோட்டரி பப்ளிக்கின் சான்று அரசிற்கும் சட்டத்திற்கும் எப்படி பயன்படுகிறது?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் யாவை?

நோட்டரி பப்ளிக்கின் பொறுப்புகள் :
வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் ஆவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எங்கே செயல்படுவார்?

வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக்காக எவ்வளவு ஆண்டு இருக்கலாம்?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றளிக்கும் முறை?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எந்தெந்த ஆவணங்களில் கையெழுத்திட முடியும்?

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் யார்?


நோட்டரி பப்ளிக் வக்கீல் என்று அறியப்படுபவர், நோட்டரிச் செயல்களைச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்ட வல்லுநர் ஆவார். இந்தியாவில், நோட்டரி பப்ளிக் வக்கீல்களின் நியமனம் மற்றும் ஒழுங்குமுறை நோட்டரி சட்டம், 1952 மூலம் நியமிக்கப்படுகிறார்.

ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்து அங்கீகரிப்பதே நோட்டரி பொது வழக்கறிஞரின் முதன்மைப் பணியாகும். ஆவணங்களைச் சான்றளித்தல், சான்றளித்தல் மற்றும் சாட்சியமளித்தல், உறுதிமொழிகள் அல்லது உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் ஆகியவை நோட்டரிச் செயல்களில் அடங்கும்.

A-complete-explanation-of-who-is-a-Notary-Public-lawyer
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் சான்றொப்பம் எதற்கு தேவை?

நாம் நிறைய சந்தர்ப்பங்களில் முக்கியமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அதாவது அரசங்கம், கோர்ட் மற்றும் பள்ளி கல்லூரிகள் மேலும் வேலை சார்ந்த இடங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பத்தோடு உங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை அல்லது ஆவணங்களை நோட்டரி பப்ளிகிடம் காண்பித்து சரி பார்த்து அதன் நகல்களில் நோட்டரி பப்ளிகின் முத்திரையை பெற்று விண்ணப்பத்தோடு நோட்டரி சான்றிட்ட சான்றிதழின் அல்லது ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருப்பார்கள் இதற்கு என்ன அவசியம் என்று நாம் யோசிப்போம் உண்மையில் நோட்டரி பப்ளிக் நமது வேலையும் அரசின் வேலையும் துரிதப்படுத்துகிறார்.

என்னவென்றால் எல்லா இடங்களிலும் நமது ஒரிஜினல் ஆவணங்களை அல்லது சான்றிதழ்களை சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. இந்த மாதியான சூல்நிலையில் மோசடி நடைபெறாமல் இருக்க மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பொது அதிகாரி தான் இந்த நோட்டரி பப்ளிக்.உங்களது சான்றுகளை உங்களது ஆவணங்களை உண்மையானதாக்க அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்க உங்களது வேலைகளை துரிதப்படுத்த நோட்டரி பப்ளிகின் சான்றொப்பம் தேவைப்படுகிறது.

இவர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிட்டு அதை உறுதியான சான்றாக மாற்றுகிறார் மோசடியை தடுக்க அரசுக்கு உதவுகிறார். எனவே ஒரிஜினலுக்கு பதிலாக நகல்களை சமர்ப்பிக்கும் போதும் உண்மையான சான்றுகளை உறுதிபடுத்த நோட்டரி பப்ளிக் தேவை.

நோட்டரி பப்ளிகின் உண்மை சான்று என்றால் என்ன?

ஒரு ஒரிஜினல் சான்றிதழின் நகலில் உண்மை நகல் என்று சரிபார்த்து நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது இதையே உண்மை சான்று என்று கூறுகிறோம்.

சாட்சி உறுதி நோட்டரி சான்று என்றால் என்ன?
இருவருக்கு இடையே ஓப்பந்தம் தயாராகும் போது ஒரு முத்திரைத்தாளில் பிரமாணமாக எழுதி கொடுக்க கையெழுத்திட்டு சமர்ப்பிப்பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலும் கூட ஒரு நோட்டரி பப்ளிக்கின் முன்னிலையில் 1வது நபரும் 2வது நபரும் சரியான மனநிலையோடு பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும். அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.

நோட்டரி பப்ளிக்கின் சான்று அரசிற்கும் சட்டத்திற்கும் எப்படி பயன்படுகிறது?
ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உண்மையான ஆவணங்களை சரி பார்த்து உறுதியளிக்கும் போது ஆவணங்கள் போலியாக தாக்கல் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.இதனால் ஆவணங்களை எளிதில் உண்மையா போலியா கண்டறிந்து தடுக்க முடிகிறது. மோசடி ஆவணங்களை தடுக்கவே மாநில அரசாங்கம் பொது அதிகாரியாக நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரை நியமித்துள்ளது.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிடும் போது அந்த ஆவணங்களை நேரில் கண்டு அதை சரிபார்த்து உண்மை நகல் என ஒரு நகலுக்கு உண்மை சான்றை வழங்கவேண்டும். மேலும் பத்திரங்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுபவர்கள் நோட்டரி பப்ளிக்கின் முன்பாக தான் கையொப்பம் இட வேண்டும் அந்த சமயத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்து போடும் நபரின் அடையாளம் சான்றுகளை சரிபார்க்க வேண்டும். பத்திரத்திலோ ஆவணங்களிலோ கையொப்பமிடும் நபர் முழுமையான விருப்பத்தோடு தான் கையெழுத்து போட்டாரா என்று தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆவணம் அல்லது பரிவர்த்தனையின் உள்ளடக்கங்கள் பற்றிய சம்மந்தப்பட்ட நபரின் அல்லது ஆவணங்கள் எவை அதை பற்றிய விழிப்புணர்வு அந்த நபருக்கு இருக்கிறதா போன்றவற்றை நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சரிபார்க்கிறார்கள்.

அதாவது அந்த நபர் எதில் கையெழுத்திட போகிறார் அதை பற்றிய சரியான விழிப்புணர்வு அந்த நபருக்கு கையெழுத்திடும் முன் இருக்கிறதா என கவனித்து அதை பற்றி சொல்லி கொடுத்து அவர் அதற்கு பின் சரியான மன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்த பின் அவரிடம் கையெழுத்து வாங்குவார் இதனால் அந்த ஆவணத்தின் உண்மை தன்மை மேம்படும்.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் யாவை?
Estates documents (எஸ்டேட்ஸ்)
Deeds documents (பத்திரங்கள்)
Powers of attorney (பவர் பத்திரங்கள்)
Affidavits (வாக்குமூலங்கள்)
Licenses (உரிமங்கள்)
Contracts (ஒப்பந்தங்கள்)
Loan documents (கடன் ஆவணங்கள்)
Trusts (டிரஸ்ட் ஆவணங்கள்)
உறுதிமொழிகள் மற்றும் உறுதிமொழிகளை நிர்வகித்தல் நோட்டரி பப்ளிக் பல நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட சேவையை வழங்குகிறார்கள்.

நோட்டரி பப்ளிக்கின் பொறுப்புகள் :
பிரமாணப் பத்திரங்கள் மற்றும் சட்டப்பூர்வ அறிவிப்புகளுக்கு சான்றளிப்பது.
பத்திரங்கள் மற்றும் பிற ஒப்பந்தங்களில் மாற்றங்கள் ஒப்புதலைப் பெறுதல்.
எதிர்ப்புக் குறிப்புகள் மற்றும் பரிமாற்ற பில்களை உறுதிபடுத்துதால்.
வெளிநாட்டு வரைவுகளின் அறிவிப்பை வழங்குதல்.
வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் ஆவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

நோட்டரி விண்ணப்பத்தில் இரு மூத்த நோட்டரி வழக்கறிஞர்கள் உங்களை சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும்.

அதன் பிறகு அதற்குரிய கட்டணத்தை செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதி அந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பதாரரின் விண்ணப்பங்களை அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.

மேலும் விண்ணப்பித்த வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால் அரசாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்.என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும்.

யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அதற்கான காரணத்தை கேட்டு விசாரித்து தகுந்த காரணம் என்றால் அவர் நிராகரிக்கபடுவார்.

அப்படி ஆட்சேபனை ஏதுமில்லாமல் மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எங்கே செயல்படுவார்?
தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும் அதன் அடிப்படையில் நோட்டரி பப்ளிக் செயல்படுவார்.

மாநில அரசால் நியமிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் வழக்கறிஞருக்கு ஒதுக்கபட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும்.

ஆனால் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய தகவல் ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக்காக எவ்வளவு ஆண்டு இருக்கலாம்?
முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் மட்டும் அனுமதி அளிக்கப்படும். மூன்றாண்டுகளுக்கு பிறகு அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக தற்போது தேர்வு செய்பவர்களுக்கு விண்ணப்பிக்கும் போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போதுமானது. இதற்கும் கட்ட ணம் உண்டு.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றளிக்கும் முறை?
ஒரு வழக்கறிஞர் நோட்டரிக்கான அனுமதி பெற்றதும் நோட்டரிக்குரிய இரண்டு ரப்பர் ஸ்டாம்ப்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று நோட்டரியின் பெயர் மற்றும் அவர் செயல்பட அனுமதிக்கப்பட்ட எல்லையைக் குறிப்பிடும் வட்ட வடிவத் திலானது.

இன்னொன்று அவரது பெயர் மற்றும் முகவரி கொண்ட செவ்வக வடிவ ரப்பர் ஸ்டாம்ப். இதை பயன்படுத்தி ஸ்டாம் முத்திரையை பதிவு செய்தும கையெழுத்திடுவது.

நோட்டரி பப்ளிக் என்பவர் ஆவணத்தில் கையெழுத்திடும்போது பச்சை மையில்தான் கையெழுத்துப் போட வேண்டும்.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எந்தெந்த ஆவணங்களில் கையெழுத்திட முடியும்?
அஃபிடவிட் (Affidavit) என்று சொல்லப் படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம். உண்மையில் நீதிமன்ற ஆவணங்களில் அஃபிடவிட் இருந்தால் கட்டாயம் நோட்டரி பப்ளிக் கையெழுத்திட வேண்டும்.மாற்றுமுறை ஆவணங்கள், ஒப்பந்தங்கள்,பத்திரங்கள் போன்றவற்றில் நோட்டரி பப்ளிக் கையெழுத்திட வேண்டும்.ஒருவருடைய உயிலின் நகலை உண்மை நகல் என்று அட்டஸ்ட் செய்யலாம்.இப்படி பலதரப்பட்ட நகல் சான்றிதழ்களில் உண்மை சான்று கையொப்பமிடலாம்.

CCTV வீடியோ நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்கப்படுமா?

CCTV வீடியோ நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்கப்படுமா


இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளில் சாட்சியாக வீடியோ ஆதாரங்களை பயன்படுத்தலாமா என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது அந்த கேள்விக்கு பதில் ஆம் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சாட்சியாக தாக்கல் செய்யலாம். 



வழக்குகளில் தவிர்க்கமுடியாத முக்கியமான ஆதாரமாக இருப்பதால் CCTV வீடியோ காட்சிகளை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும்.

CCTV காட்சிகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்வது இந்திய சாட்சியச் சட்டம், 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 65B குறிப்பாக சிசிடிவி காட்சிகள் உட்பட மின்னணு ஆதாரங்களுடன் தொடர்புடையது. இந்தப் பிரிவின்படி, சிசிடிவி காட்சிகள் போன்ற மின்னணுப் பதிவில் உள்ள எந்தத் தகவலும் ஆவணமாகக் கருதப்பட்டு, பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அசலின் கூடுதல் ஆதாரம் இல்லாமல், எந்தவொரு நடவடிக்கையிலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்:


Join : https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


Is-CCTV-video-admissible-as-evidence-in-court

1.சிசிடிவி காட்சிகள் அசல் சாதனத்தில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன, அல்லது அசல் சாதனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறது.

2.CCTV காட்சிகளுடன், இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B(4) இன் கீழ் தேவைப்படும் சான்றிதழுடன், CCTV காட்சிகளைக் கொண்ட மின்னணு பதிவை அடையாளம் கண்டு, அது தயாரிக்கப்பட்ட விதத்தை விவரிக்க வேண்டும்.

3.சான்றிதழில் மின்னணு பதிவை பராமரித்த நபர் அல்லது சம்பந்தப்பட்ட நேரத்தில் சாதனத்தின் காவலில் அல்லது கட்டுப்பாட்டை வைத்திருந்த நபரின் கையொப்பம்மிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வழங்கும் நபர் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக ஏற்க நீதிமன்றம் மறுத்துவிடும்.

சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட சாட்சியங்களை ஏற்றுக்கொள்வது இறுதியில் நீதிபதியின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்வதற்கு முன், அதன் பொருத்தம், நம்பகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை நீதிபதி பரிசீலிப்பார்.

கூடுதலாக, நீதிமன்றத்தின் அதிகார வரம்பு CCTV காட்சிகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்வதை பாதிக்கலாம், ஏனெனில் வெவ்வேறு நீதிமன்றங்கள் அவற்றின் சொந்த நடைமுறைகள் மற்றும் ஆதார விதிகளைப் பின்பற்றப்படுகிறது.

உங்கள் வழக்கு பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள வழக்கின் நடைமுறைகளை தெரிந்து கொள்ள வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

Transfer of Property Act

 

 

Frequently Asked Questions on Transfer of Property Act

Q. 49 Discuss briefly the law relating to transfer of Actionable claims.

 

Partnership Act | Important Q&A for LLB, LLM, Advocate and All Judicial ...

 

 

Frequently Asked Questions on Partnership Law

Q. 34 `A', `B' and `C' are partners in an unregistered firm. A is wrongfully expelled from the firm by `B' and `C'. `A' files a suit against `B' and `C' for declaration that he has been wrongly expelled from the firm and that he continues to be partner in the firm. How will you decide?

 

Followers